Monday, March 3, 2014

அயனாம்சமும் தசா இருப்பில் வரும் குழப்பங்களும்

ஜோதிடத்தில் இரு வகையான ராசி சக்கரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய முறை ஜோதிடத்தில் நிராயன ராசி சக்கரம் பயன்படுத்தப்படுகிறது. நிராயன ராசி சக்கரத்தை ஆங்கிலத்தில் Fixed Zodiac என குறிப்பிடுவர். மேற்கத்திய நாட்டினர் சயான ராசி சக்கரத்தை பயன் படுத்துகின்றனர். சயான ராசி சக்கரத்தை ஆங்கிலத்தில் Movable Zodiac என குறிப்பிடுவர். 
ராசி சக்கரத்தின் ஆரம்ப புள்ளியானது மேசம் 0 பாகையில் நிலையாக மாறாமல் இருப்பதாக இந்திய முறை ஜோதிடத்தில் பாவிக்கப்படுகிறது. எனவே இந்திய முறை ஜோதிடத்தில் பயன் படுத்தப்படும், ராசி சக்கரம் நிராயன ராசி சக்கரம் என அழைக்கப்படுகிறது. ராசி சக்கரத்தின் ஆரம்ப புள்ளியானது மேசம் 0 பாகையில் நிலையாக எப்பொழுதும் இல்லாமல், அது வருடத்திற்கு தோராயமாக 51 விகலைகள் வீதம் பின்னோக்கி, நகர்வதாக மேற்கத்திய நாட்டினர் கருதுகின்றனர். இவ்வாறு பின்னோக்கி நகர்ந்து செல்லும் ராசி சக்கரத்தின் ஆரம்ப முனையானது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மேசம் 0 பாகையை தொடும், அந்த ஆண்டை துருவமாக வைத்துக்கொண்டு (Starting year), அந்த ஆண்டு முதல் நடப்பு ஆண்டுவரை உள்ள மொத்த வருடங்களைக் கணக்கிட்டு, அதை 51 விகலைகளால் பெருக்கி வரும் பாகை – கலை – விகலை களை அயனாம்சம் என குறிப்பிடுகின்றனர்.
இந்த அயனாம்சம் தற்பொழுது தோராயமாக 23 பாகைகளாகும். சயான ராசி சக்கரத்தில் ஒரு கிரகம் 37 பாகை ரிசபத்தில் இருப்பது போல் காட்டப்பட்டிருந்தால், நிராயன ராசி சக்கரத்தில் அந்த கிரகம் 14 பாகை மேசத்தில் இருப்பது போல் காட்டப்பட்டிருக்கும். அதாவது 37 பாகை சயான ஸ்புடத்திலிருந்து 23 பாகை அயனாம்சம் கழிக்கப்பட்டால் மீதம் 14 பாகை என்பது மேசத்திற்குள் வந்து விடும். அதாவது சயான ராசி சக்கரத்திற்கும், நிராயன ராசி சக்கரத்திற்கு இடையே உள்ள ஸ்புட வித்தியாசமே (The longitudinal difference between fixed zodiac and movable zodiac) அயனாம்சம் எனக்கூறப்படுகிறது.
இந்த அயனாம்ச கணிதம் செய்வதில் பஞ்சாங்க கணிதர்களிடையே பல கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. அதாவது அயனாம்ச கணிதம் செய்வதற்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் துருவ ஆண்டு (Starting year) இதுதான் என்று ஒவ்வொருவரும் ஒரு ஆண்டை குறிப்பிடுகின்றனர். இதனால் அவர்கள் கணித்துத்தரும் அயனாம்சம் பஞ்சாங்கத்திற்கு பஞ்சாங்கம் வேறுபடுகிறது. நடைமுறையில் 28 க்கும் மேலான அயனாம்சங்கள் புழக்கத்தில் உள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமானவை பி.வி.ராமன் அயனாம்சம், கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் மற்றும் லஹரி அயனாம்சங்களாகும். கிருஷ்ணமூர்த்தி அயனாம்சத்திற்கும், லஹரி அயனாம்சத்திற்கும் இடையே உள்ள வித்தியசம் 06 கலைகளாகும். கிருஷ்ணமூர்த்தி அயனாம்சத்திற்கும், பி.வி.ராமன் அயனாம்சத்திற்கும் இடையே உள்ள வித்தியசம் 01 பாகையாகும்.
இந்த அயனாம்ச வித்தியாசங்களால், ஜாதகம் கணிப்பவர் பயன்படுத்தும் அயனாம்சங்களைப் பொருத்து தசா இருப்பில் பெரிய அளவில் வித்தியாசங்கள் வருகிறது. தசா இருப்பு என்பது பிறப்பு நேரத்தில் சந்திர நின்ற நட்சத்திர பாகையை கொண்டு கணிக்கப்படுகிறது. உதாரணமாக கிருஷ்ணமூர்த்தி அயனாம்சத்தை பயன்படுத்தி கணிக்கப்பட்ட சந்திரனின் பாகை 10º அஸ்வினி என்றால், பி.வி.ராமன் அயனாம்சத்தை பயன்படுத்தி கணிக்கப்பட்ட சந்திரனின் பாகை 09º அஸ்வினி என இருக்கும். அஸ்வினி நட்சத்திர அதிபதி கேதுவாகும். எனவே கேது தசை இருப்பு எவ்வளவு என கணித்து பார்ப்போம்.

கேது தசை இருப்பு (கிருஷ்ணமூர்த்தி அயனாம்)
= 10º ☓ 7
-----------
13º20′
= 600☓ 7
-----------
800
= 4200
-----------
800
800)4200(5 வருடம்
4000
---------------

200☓12 =2400

800)2400(3 மாதம்
2400
---------------
0
--------------
கேது தசை இருப்பு (கிருஷ்ணமூர்த்தி அயனாம்) = 5 வருடம் 3 மாதம் 0 நாள்

கேது தசை இருப்பு (பி.வி.ராமன் அயனாம்)
= 09º ☓ 7
----------
13º20′
= 540☓ 7
-----------
800
= 3780
--------
800
800)3780(4 வருடம்

3200
------------
580☓12 =6960
800)6960(8 மாதம்
6400
----------
360☓30 = 10800
800)10800(13 நாள்
10400
----------------
400
கேது தசை இருப்பு (பி.வி.ராமன் அயனாம்) = 4 வருடம் 8 மாதம் 13 நாள்

கேது தசை இருப்பு (கிருஷ்ணமூர்த்தி அயனாம்)
= 5 வருடம் 3 மாதம் 0 நாள்
கேது தசை இருப்பு (பி.வி.ராமன் அயனாம்)
= 4 வருடம் 8 மாதம் 13 நாள்
தசா இருப்பு வித்தியாசம்
= 0 வருடம் 6 மாதம் 17 நாள்

01 பாகை அயனாம்ச வித்தியாசத்தில் 6 மாதம் 17 நாள் தசா இருப்பு வித்தியாசப்படுகிறது. தசாக்காலம் என்பது பல வருடங்களைக்கொண்டது. அதில் புக்தி என்பது ஒரிரு வருடங்களைக்கொண்டது. அந்தரம் என்பது ஓரிரு மாதங்களைக்கொண்டதாகும். உதாரணமாக சுக்கிர தசையின் அளவு 20 வருடங்களாகும். சுக்கிர தசையில் சுக்கிர புக்தியின் அளவு 03 வருடம் 04 மதங்களாகும். சுக்கிர தசையில், சுக்கிர புக்தியில், சுக்கிர அந்தரத்தின் அளவு 03 மாதம் 20 நாட்களாகும்.
இந்த அயனாம்ச வித்தியாசங்களினால் நடப்பு அந்தரம் இதுதான் என்பதை உறுதிபடுத்தமுடியாத நிலை உள்ளது. தசை என்பது நீண்ட காலமாக இருப்பதால், காலத்திற்கு தகுந்தார்போல் மாறும் பலாபலன்களை தசையை வைத்து கூறுவதில்லை. நடை முறையில் 10வருடம் அல்லது 20 வருடங்களுக்கு மனிதனுடைய வாழ்க்கை ஒரே மாதிரி இருப்பதில்லை. ஓரிரு வருட இடைவெளியில் வாழ்க்கை சம்பவங்கள் மாறுவதைக் கண்கூடாக காணலாம். புக்திகள் ஓரிரு வருட இடைவெளியில் மாறக்கூடியதாக அமைந்துள்ளன. கோட்சார பலன் கூறுவதிலும் அதிகபட்சமாக சனி பெயர்ச்சியின் காலம் 2½ வருடங்களாக அமைந்துள்ளது. எனவே கால நிர்ணயம் செய்வதற்கு புக்திகள் மட்டுமே பயன்படும்.
தசா மாற்றம் நிகழும்போது ஜாதகரின் வாழ்க்கை சூழ்நிலைகள் மட்டுமே மாறுவதை காணலாம். அதை ஒரு பொதுப்பலனாகவே கூறமுடியும். புக்திகள் மாறும்போதுதான் உணமையிலேயே வாழ்க்கை சம்பவங்கள் மாறுகின்றன. எனவே புக்திகளுக்கு மட்டும் பலன் கூறினால் போதுமானது.
வசியம் என்றால் என்ன?

தாய் பாசத்திற்கு அடிமையாகாத மனிதன் யாரும் இருக்கமுடியாது. இதற்கு என்ன காரணம் என்றால் அவன் தன் தாயிடம் குடித்த தாய்ப்பால்தான். அதாவது “ஒருவருடைய உடல் சார்ந்த பொருளை இன்னொருவர் உட்கொண்டால் ,யாருடைய உடல் சார்ந்த பொருளை உட்கொண்டாரோ , அவருக்கு உட்கொண்டவர் வசியமாகிவிடுவார்”. இதுதான் வசியத்தின் அடிப்படை. ஒரு சில நாட்கள் மட்டுமே உண்டவர்கள் கூட வசிய மாகிவிடுவார்கள். அப்படியென்றால் ஒரிரு வருடங்கள் தாயிடம் பால் குடிக்கும் பிள்ளையின் நிலையை எண்ணிப்பாருங்கள். இதனால்தான் தாய் பாசத்தை யாராலும் மறக்க முடியவில்லை. தற்காலத்தில் தாய்ப்பால் ஊட்டுவது குறைந்து வருகிறது, இதனால் பிள்ளைகளுக்கு தாய் மீது பாசம் இருப்பதில்லை.
திருமணமான சில மாதங்களில் பிள்ளையின் தாய் அழுது புலம்புவது உண்டு. அதாவது என் பிள்ளை அவன் மனைவியின் பேச்சை கேட்க ஆரம்பித்துவிட்டான். என்னை மறந்து விட்டான் எனக் கூறுவது உண்டு. இதற்கு என்ன காரணம் என்றால் கணவன் மனைவியிடையே நடக்கும் எச்சில் பரிமாற்றம்தான். இது எப்படி என்றால் சமையல் செய்யும் பெண்கள், தங்களுடைய வியர்வை, கைகளிலுள்ள அழுக்கு இவைகளை , தான் சமைக்கும் சாப்பாட்டில் தனக்கு தெரியாமலேயே கலந்து விடுகிறார்கள். அந்த உணவை சாப்பிடும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சமைத்த பெண்ணிற்கு வசியமாகி, அந்த பெண்ணின் பேச்சிற்கு கட்டுப்பட்டு நடப்பார்கள்.
மனைவி கணவனுக்கு வசியமாகி இருக்கவேண்டும் என்ற காரணத்திற்காக, கணவன் சாப்பிட்டுவிட்டு மீதமாக விட்டுசெல்லும் எச்சில் சோற்றை மனைவி சாப்பிட வேண்டும் என்ற ஒரு சம்பிரதாயம் சமூகத்தில் இருந்தது. இது கணவன் மனைவியரிடம் பிரிவினை ஏற்படாமல் தடுப்பதற்கு நம் முன்னோர்கள் செய்த ரகசிய ஏற்பாடு. முற்காலத்தில் பாரத பெண்கள் இதை கடைபிடித்து வந்தார்கள். இதனால் முற்காலத்தில் கணவன் மனைவியிடையே அதிகமா பிணக்குகள் வந்ததில்லை. மணமுறிவுகள் எதுவும் ஏற்படவில்லை. தற்காலத்தில் இந்த சம்பிரதாயம் பெண்களால் கைவிடப்பட்டுள்ளது. இதனால் மண முறிவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது.
பிறரிடம் உதவி கேட்க நினைப்பவர்கள், உரிய நபரை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு இரண்டு,மூன்று நாட்கள் விருந்து படைத்து , தனக்கு வேண்டிய உதவிகளை எளிதில் அடைந்து வருகிறார்கள். விருந்து உண்பவர் விருந்து படைத்தவருக்கு வசியமாவார். இதனால்தான் அடுத்தவர் வீட்டில் சாப்பிடுவதை நம் முன்னோர்கள் தவிர்த்து வந்தார்கள்.
சில வீடுகளில் வேலைக்காரியாக வந்த பெண்ணுடன் கணவனுக்கு தொடர்பு ஏற்பட்டுவிடுவதை காணமுடிகிறது. இதற்கு காரணம் வேலைக்கார பெண்ணின் சமையல்தான். தன் கைப்பட சமையல் செய்யாத எந்த பெண்ணும் தன் கணவனை தன் கைக்குள் வைத்துக்கொள்ளமுடியாது. இதனால்தான் முற்காலத்தில் மாமியார்கள் தன் மருமகள்களை,தான் சாகும்வரை சமையல் அறைக்குள் நுழையவிடுவதில்லை. குடும்பத்தில் தன் ஆதிக்கம் தான் சாகும் வரை இருக்கவேண்டும் என்ற ஆசையில் அவர்கள் மருமகள்களை அனுமதிப்பதில்லை.
அடுத்தவர் வீட்டில் சாப்பிடக்கூடாது, அடுத்தவர் பயன் படுத்திய பொருட்களை நாம் பயன்படுத்தக்கூடாது, அடுத்தவர் வீட்டில் தங்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் எல்லாம் நாம் பிறருக்கு வசியமாகிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையில்தான்.
தற்காலத்தில் குடும்பங்களில் ஒற்றுமை இல்லாததற்கு காரணம் பல வீடுகளில் சமையல் நடப்பதில்லை. குடும்ப உறுப்பினர்களிடையே எச்சில் பரிமாற்றம் நிகழ்வதில்லை. இதனால் குடும்ப பாரம்பரியங்கள் சிதைந்து வருகின்றன. குடும்ப உறுப்பினர்களிடையே மறைமுகமாக எச்சில் பரிமாற்றம் அவ்வப்பொழுது நடந்து வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் வீட்டில் கண்டிப்பாக சமையல் செய்யவேண்டும். கண்டிப்பாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் மட்டுமே சாப்பிடுவதற்கு பழகிக்கொள்ளவேண்டும். இதை கடை பிடித்தால் குடும்பத்தில் நிச்சயமாக ஒற்றுமை நிலவும்.