Monday, March 3, 2014

வசியம் என்றால் என்ன?

தாய் பாசத்திற்கு அடிமையாகாத மனிதன் யாரும் இருக்கமுடியாது. இதற்கு என்ன காரணம் என்றால் அவன் தன் தாயிடம் குடித்த தாய்ப்பால்தான். அதாவது “ஒருவருடைய உடல் சார்ந்த பொருளை இன்னொருவர் உட்கொண்டால் ,யாருடைய உடல் சார்ந்த பொருளை உட்கொண்டாரோ , அவருக்கு உட்கொண்டவர் வசியமாகிவிடுவார்”. இதுதான் வசியத்தின் அடிப்படை. ஒரு சில நாட்கள் மட்டுமே உண்டவர்கள் கூட வசிய மாகிவிடுவார்கள். அப்படியென்றால் ஒரிரு வருடங்கள் தாயிடம் பால் குடிக்கும் பிள்ளையின் நிலையை எண்ணிப்பாருங்கள். இதனால்தான் தாய் பாசத்தை யாராலும் மறக்க முடியவில்லை. தற்காலத்தில் தாய்ப்பால் ஊட்டுவது குறைந்து வருகிறது, இதனால் பிள்ளைகளுக்கு தாய் மீது பாசம் இருப்பதில்லை.
திருமணமான சில மாதங்களில் பிள்ளையின் தாய் அழுது புலம்புவது உண்டு. அதாவது என் பிள்ளை அவன் மனைவியின் பேச்சை கேட்க ஆரம்பித்துவிட்டான். என்னை மறந்து விட்டான் எனக் கூறுவது உண்டு. இதற்கு என்ன காரணம் என்றால் கணவன் மனைவியிடையே நடக்கும் எச்சில் பரிமாற்றம்தான். இது எப்படி என்றால் சமையல் செய்யும் பெண்கள், தங்களுடைய வியர்வை, கைகளிலுள்ள அழுக்கு இவைகளை , தான் சமைக்கும் சாப்பாட்டில் தனக்கு தெரியாமலேயே கலந்து விடுகிறார்கள். அந்த உணவை சாப்பிடும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சமைத்த பெண்ணிற்கு வசியமாகி, அந்த பெண்ணின் பேச்சிற்கு கட்டுப்பட்டு நடப்பார்கள்.
மனைவி கணவனுக்கு வசியமாகி இருக்கவேண்டும் என்ற காரணத்திற்காக, கணவன் சாப்பிட்டுவிட்டு மீதமாக விட்டுசெல்லும் எச்சில் சோற்றை மனைவி சாப்பிட வேண்டும் என்ற ஒரு சம்பிரதாயம் சமூகத்தில் இருந்தது. இது கணவன் மனைவியரிடம் பிரிவினை ஏற்படாமல் தடுப்பதற்கு நம் முன்னோர்கள் செய்த ரகசிய ஏற்பாடு. முற்காலத்தில் பாரத பெண்கள் இதை கடைபிடித்து வந்தார்கள். இதனால் முற்காலத்தில் கணவன் மனைவியிடையே அதிகமா பிணக்குகள் வந்ததில்லை. மணமுறிவுகள் எதுவும் ஏற்படவில்லை. தற்காலத்தில் இந்த சம்பிரதாயம் பெண்களால் கைவிடப்பட்டுள்ளது. இதனால் மண முறிவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது.
பிறரிடம் உதவி கேட்க நினைப்பவர்கள், உரிய நபரை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு இரண்டு,மூன்று நாட்கள் விருந்து படைத்து , தனக்கு வேண்டிய உதவிகளை எளிதில் அடைந்து வருகிறார்கள். விருந்து உண்பவர் விருந்து படைத்தவருக்கு வசியமாவார். இதனால்தான் அடுத்தவர் வீட்டில் சாப்பிடுவதை நம் முன்னோர்கள் தவிர்த்து வந்தார்கள்.
சில வீடுகளில் வேலைக்காரியாக வந்த பெண்ணுடன் கணவனுக்கு தொடர்பு ஏற்பட்டுவிடுவதை காணமுடிகிறது. இதற்கு காரணம் வேலைக்கார பெண்ணின் சமையல்தான். தன் கைப்பட சமையல் செய்யாத எந்த பெண்ணும் தன் கணவனை தன் கைக்குள் வைத்துக்கொள்ளமுடியாது. இதனால்தான் முற்காலத்தில் மாமியார்கள் தன் மருமகள்களை,தான் சாகும்வரை சமையல் அறைக்குள் நுழையவிடுவதில்லை. குடும்பத்தில் தன் ஆதிக்கம் தான் சாகும் வரை இருக்கவேண்டும் என்ற ஆசையில் அவர்கள் மருமகள்களை அனுமதிப்பதில்லை.
அடுத்தவர் வீட்டில் சாப்பிடக்கூடாது, அடுத்தவர் பயன் படுத்திய பொருட்களை நாம் பயன்படுத்தக்கூடாது, அடுத்தவர் வீட்டில் தங்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் எல்லாம் நாம் பிறருக்கு வசியமாகிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையில்தான்.
தற்காலத்தில் குடும்பங்களில் ஒற்றுமை இல்லாததற்கு காரணம் பல வீடுகளில் சமையல் நடப்பதில்லை. குடும்ப உறுப்பினர்களிடையே எச்சில் பரிமாற்றம் நிகழ்வதில்லை. இதனால் குடும்ப பாரம்பரியங்கள் சிதைந்து வருகின்றன. குடும்ப உறுப்பினர்களிடையே மறைமுகமாக எச்சில் பரிமாற்றம் அவ்வப்பொழுது நடந்து வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் வீட்டில் கண்டிப்பாக சமையல் செய்யவேண்டும். கண்டிப்பாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் மட்டுமே சாப்பிடுவதற்கு பழகிக்கொள்ளவேண்டும். இதை கடை பிடித்தால் குடும்பத்தில் நிச்சயமாக ஒற்றுமை நிலவும்.

No comments:

Post a Comment